கிரெடிட் கார்டு தகவல்களை ஏமாற்றி வாங்கியும், ஏ.டி.எம்., மையத்தில் பணம் எடுக்க உதவி செய்வதாக நடித்தும், எஸ்.எம்.எஸ்., மூலம் லிங்க் அனுப்பியும் நடந்த பண மோசடி சம்பவங்கள் சமீபகாலமாக அதிகரித்துள்ளன.பொதுமக்கள் உஷாராக இருக்க, இதோ அவற்றில் சில... * கோவை ஆவாரம்பாளையம் ஸ்ரீ ராயர் நகரை சேர்ந்தவர் சுப்பையா, 71. வணிகவரித்துறையில் அலுவலக உதவியாளராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவர் பிப்.,19ம் தேதி ஆவாரம்பாளையம் ரோடு புது சித்தாபுதூர் பாரத ஸ்டேட் வங்கி ஏ.டி.எம்., மையத்தில் 9,500 ரூபாய் எடுத்தார். அப்போது அங்கு வந்த டிப்டாப் நபர் ஒருவர், தான் கணபதி கிளை பாரத ஸ்டேட் வங்கி ஊழியர் என்று அறிமுகம் செய்து கொண்டார்.சுப்பையாவிடம் வந்து பேச்சுக் கொடுத்த அவர், பணம் எடுக்க உதவுவதாக கூறி ஏ.டி.எம்., கார்டையும், ரகசிய எண்ணையும் வாங்கிக்கொண்டார். முதல் முறை 20 ஆயிரம் ரூபாயும், இரண்டாம் முறை 10 ஆயிரத்து 500 ரூபாயும் எடுத்துக் கொடுத்தார். அதன்பிறகு கார்டை திருப்பிக் கொடுத்த அந்நபர், வேலை இருப்பதாக கூறி சென்று விட்டார். மீண்டும் சுப்பையா, தானே பணம் எடுக்க முயற்சித்தார்.பல முறை முயன்றும் அவருக்கு பணம் வரவில்லை. இது...