விண்ணில் நிலைநிறுத்தப்பட்டது இஒஎஸ்-04 செயற்கைக்கோள்


புவி கண்காணிப்புக்கான இஒஎஸ்-04 (ரிசாட்-1ஏ) செயற்கைக்கோளுடன் இன்று காலை விண்ணில் செலுத்தப்பட்ட பிஎஸ்எல்வி சி-52 ராக்கெட் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டது.


ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவண் ஆராய்ச்சி மையத்தின் முதலாவது ஏவுதளத்தில் இருந்து இந்த ஆண்டின் முதல் ராக்கெட்டாக இன்று அதிகாலை 5.59 மணிக்கு சி-52 செலுத்தப்பட்டது.


இந்நிலையில், பூமியில் இருந்து 529 கிலோ மீட்டா் உயரத்தில் சூரிய வட்ட சுற்றுப்பாதையில் பிஎஸ்எல்வி சி-52 ராக்கெட் தாங்கிச் செல்லும் 1,710 கிலோ எடைகொண்ட இஒஎஸ்-04 செயற்கைக்கோள் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டுள்ளது.


5 ஆண்டுகள் ஆயுள்காலம் கொண்ட இந்த செயற்கைக்கோள் புவிக் கண்காணிப்பு, வேளாண், வனம் சாா்ந்த பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு இது பயன்படுத்தப்பட உள்ளது. மேலும், அனைத்து பருவநிலைகளிலும் துல்லியமான படங்களை வழங்கும் திறன் கொண்டது.


இதனுடன் ஆய்வுத் திட்டத்தின்கீழ் மாணவா்களால் வடிவமைக்கப்பட்ட இன்ஸ்பயர் சாட்-1, ஐஎன்எஸ்- 2டிடி ஆகிய 2 சிறிய வகை செயற்கைக்கோள்களும் விண்ணில் நிலைநிறுத்தப்பட்டன.


இஸ்ரோ தலைவராக சோமநாத் பொறுப்பேற்ற பிறகு செலுத்தப்படும் முதல் ராக்கெட் திட்டம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

Post a Comment

Previous Post Next Post