அனைத்து குழந்தைகளுக்கும் இனிய குழந்தைகள் தின வாழ்த்துகள் 



திருக்குறள் :

பால் :அறத்துப்பால்
இயல்:துறவறவியல்
அதிகாரம் : வாய்மை

குறள் :296

பொய்யாமை அன்ன புகழில்லை எய்யாமை
எல்லா அறமுந் தரும்.

விளக்கம்:

பொய் சொல்லாமல் இருப்பது போலப் புகழ் தருவது இல்லை. அது அவன் அறியாமலேயே அவனுக்கு எல்லாப் புண்ணியங்களையும் தரும்.


பழமொழி :

Fact is stronger than fiction.

கற்பனையை விட உண்மை விசித்திரமானது.


இரண்டொழுக்க பண்புகள் :
1) பேப்பர், உணவு அடைக்கப் பட்டு வந்த கவர்கள் மற்றும் குப்பைகளை குப்பை தொட்டியில் தான் போடுவேன் பள்ளி வளாகத்தில் மற்றும் தெருவில் போட மாட்டேன்.

2) ஒரு நாளைக்கு சில நிமிடங்கள் ஆவது பத்திரிகை மற்றும் புத்தகங்கள் வாசிப்பேன்.

பொன்மொழி :

துணிந்து செயல்படுகிறவர்கள்தான் அடிக்கடி வெற்றியின் சிகரத்தை எட்டுகிறார்கள். ஜவஹர்லால் நேரு

பொது அறிவு :

1. காகித பணத்தை பயன்படுத்தும் மு,தல் நாடு எது?


விடை: சீனா
2. இந்தியாவின் மிக உயர்ந்த இலக்கிய விருது எது?



விடை: ஞான பீட விருது










English words & meanings :
valor-great courage in the face of danger, especially in battle.வீரம். vagary-unexpected change in a situation or in someone's behaviour ;வகை.

ஆரோக்ய வாழ்வு :

தாமரைப் பூ :இருதயத்தை பாதுகாக்கும். இதய தசைகளை வலுப்படுத்தும். இருதயம் தொடர்புடைய எண்ணற்ற நோய்களை போக்க, தாமரை பூ கஷாயம் ஏற்றது. ...

நவம்பர் 14

ஜவகர்லால் நேரு (நவம்பர் 14, 1889மே 27, 1964), இந்தியாவின் முதல் பிரதமர் ஆவார். இவர் பண்டிட் நேரு மற்றும் பண்டிதர் நேரு என்றும் அழைக்கப் பெற்றார். இவர் குழந்தைகள் மேல் மிகவும் அன்பு கொண்டவர். இவர் பிறந்தநாள் அன்று இந்தியாவில் குழந்தைகள் தினம் கொண்டாடப்படுகிறது. இந்தியாவின் முதல் பிரதம மந்திரியாக, 15 ஆகஸ்ட் பதவி ஏற்று அவர் தொடக்க உரையாக "விதியுடன் ஒரு போராட்டம்" என்ற தலைப்பில் உரையாற்றினார். இந்தியாவின் திட்டக் குழுவை உருவாக்கி முதல் ஐந்தாண்டுத் திட்டத்தை 1951 இல் வரைந்தார். இந்தியாவின் குழந்தைகள் மற்றும் இளைஞர்களின் கல்வியை மேம்படுத்துவதில்தான் இந்தியாவின் எதிர்கால முன்னேற்றம் இருக்கிறது என்று நம்பி அதன் அவசியத்தை உணர்ந்து நேரு அதில் மிகவும் அக்கறை காட்டினார்.

நீதிக்கதை

மூன்று தவளைகள் ஒரு மலையின் உச்சிக்கு ஏறுவதற்கு தயாராகின. அவை மலையேற ஆரம்பிக்கும் போது பார்வையாளராக இருந்த ஒருவர் 'இவ்வளவு உயரமான மலையில் ஏறும்போது வழியில் கற்கள் தடுக்கி விழுந்தால் அவ்வளவு தான்' என்றார். உடனே ஒரு தவளை மலை ஏறுவதை நிறுத்தி விட்டது. சிறுது தூரம் சென்றவுடன் இன்னொருவர் ‘மேலே செல்லும் போது பாம்புகள் பிடித்து விட்டால் என்ன செய்யப் போகின்றன ' என்றார். உடனே இரண்டாவது தவளையும் கீழிறங்கிவிட்டது. ஆனால் யார் என்ன சொன்னாலும் கேட்காத மூன்றாவது தவளை மட்டும் மலை உச்சியை சென்றடைந்தது. பின்னர் கீழிறங்கிய அந்தத் தவளையிடம் அங்கிருந்த ஒருவர் உன்னால் மட்டும் எப்படி இவர்கள் எல்லோரும் எதிர்மறையாக கூறியும் துணிந்து சிகரத்தை அடைய முடிந்தது' என்று கேட்டார். அதற்கு அந்தத் தவளை 'எனக்குக் காது கேட்காது " என்றது. நாமும் வாழ்வில் இந்த தவளையை போல இருந்தால் தான் சில நேரங்களில் முன்னேற முடியும்.


இன்றைய செய்திகள்
14.11.2023



*வேளாண் பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சி பணிக்கு ஆட்கள் தேவை.
பல்கலைக்கழகம் அறிவிப்பு.


*உடுமலை அமராவதி சைனிக் பள்ளியில் மாணவர் சேர்க்கை அறிவிப்பு.


*மாநில அளவிலான கலை திருவிழா: திருப்பூர் மாவட்டத்தில் இருந்து 436 பேர் தேர்வு.


*அவினாசி வட்டாரத்தில் தொடர் மழையால் நிரம்பி வழியும் குளம், குட்டைகள். வனப்பகுதி தடுப்பணைகளும் நிரம்பின.


*ஆஸ்திரேலியாவில் மூன்றாவது டிவிஷன் கிரிக்கெட் போட்டியில் நியூசிலாந்து வீரர் நீல்வாக்னர், ஒரு ஓவரில் ஆறு பந்துகளிலும் விக்கெட் வீழ்த்தி சாதனை படைத்துள்ளார்.



Today's Headlines




* Manpower required for research work in Agricultural University. Announcement from the University.


*Admission Notification of Udumalai Amaravati Sainik School.


*State level Kalaithiruvila: 436 candidates selected from Tirupur district.


* Ponds and puddles overflowing due to continuous rains in Avinasi area. Forest barrages are also full.


*New Zealand cricketer Neil Wagner holds the record for taking six wickets in an over in a third division match in Australia.

Prepared by


Covai women ICT_போதிமரம்

Post a Comment

Previous Post Next Post